Powered by Blogger.

Saturday 23 March 2019

”ஸ்டாலின் ஒரு பச்சோந்தி” திமுக-வை கடுமையாக சாடிய முதல்வர் பழனிசாமி

0 comments

கூலிப்படைக்கு ஜாமின் எடுக்கும் ஒரே கட்சி என்றுன், மு.க. ஸ்டாலின்ஒரு பச்சோந்தி என்றும் தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி திமுக-வை கடுமையாக சாடி பேசினார். 
தர்மபுரியில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் ஸ்டாலின் பச்சோந்தி போன்று தமிழகத்தில் ஒரு பிரதமர் வேட்பாளரையும், பிறமாநிலங்களுக்கு செல்லும் போது வேறு விதிமாக பேசி வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது. மத்தியில் மோடி தலமையில் நிலையான ஆட்சி அவசியம் என்று கூறினார். 

தொடர்ந்து தர்மபூரி தொப்பூரில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது வழியெங்கும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் முதல்வருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். 

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் பேசும் போது, முதல்வர் பழனிசாமி எளிமையானவர். அதிமுக தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும். பாப்பிரெட்டி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment